ஒரு உயிர் உருவாகும்போது
ஒரு உயிர் பிரியும்போது
ஒரு தோல்வியை ஏற்கும்போது
ஒரு வெற்றியை சுவைக்கும்போது
ஒரு மகிழ்ச்சியை உள்வாங்கும்பொழுது
ஒரு தூரோகத்தை எதிர்கொள்ளும்போது
ஒரு அலட்சியப்படுத்தப்படுதலை உணரும்போது
ஒரு அன்பு மறுக்கப்படும்போது
ஒரு காதல் தோல்வியுரும்போது
ஒரு நட்பு முறியும்போது
ஒரு தனிமை சூழ்ந்துகொள்ளும்போது
அழுகை அவற்றை வரவேற்கிறது.

No comments:
Post a Comment