ஒரு வழியாக
கவிதை என்று நினைத்து
அவளைப் பற்றி ஒரு கவிதையை எழுதி முடித்தேன்
எதற்கும் இருக்கட்டுமே என்று நண்பனிடம் காட்டினேன்
இது எழுத்துப் பிழை, இது சந்திப் பிழை, இது..
பாவி,
நான்கு வரிகளில் நாற்பது பிழைகளைக் கண்டுபிடித்துவிட்டான்
இலக்கணம் தெரியாத நீயெல்லாம்
ஏன் கவிதை எழுதுகிறாய் என்று கேட்டும் விட்டான்
பரவாயில்லை..
இலக்கணம் தவறியிருந்தாலும் எடுத்துச் சென்று காட்டினேன் அவளிடம்
முழுவதும் படித்துவிட்டு,
ஒரு கோணல் சிரிப்பைப் பதிலாக அளித்தாள்!
எவன் சொன்னான்
கவிதைக்கு இலக்கணம் வேண்டும் என்று.
கவிதை என்று நினைத்து
அவளைப் பற்றி ஒரு கவிதையை எழுதி முடித்தேன்
எதற்கும் இருக்கட்டுமே என்று நண்பனிடம் காட்டினேன்
இது எழுத்துப் பிழை, இது சந்திப் பிழை, இது..
பாவி,
நான்கு வரிகளில் நாற்பது பிழைகளைக் கண்டுபிடித்துவிட்டான்
இலக்கணம் தெரியாத நீயெல்லாம்
ஏன் கவிதை எழுதுகிறாய் என்று கேட்டும் விட்டான்
பரவாயில்லை..
இலக்கணம் தவறியிருந்தாலும் எடுத்துச் சென்று காட்டினேன் அவளிடம்
முழுவதும் படித்துவிட்டு,
ஒரு கோணல் சிரிப்பைப் பதிலாக அளித்தாள்!
எவன் சொன்னான்
கவிதைக்கு இலக்கணம் வேண்டும் என்று.

nice poetic lines bro ...! u think well brilliant .....:-)
ReplyDelete