Tuesday, 24 September 2013

வீதியில் சந்தித்த ஒரு பார்வை


வீதியில் நடந்து செல்கையில்
தற்செயலாகத்தான் பார்த்தேன் அப்பெண்ணை
தனக்கு வீடில்லை என
ஒரு தட்டியில் எழுதி தெரியப்படுத்துகிறாள்
சத்தியமாக இதற்குப் பின்னே ஒரு கதை இருக்கும்
அதைத் கேட்டுத்
தாங்கும் சக்தி தான் எனக்கில்லை
அவளைக் கடந்து செல்கையில்
குழப்பத்துடனே ஓரக் கண்ணில் பார்க்கிறேன்
கேட்டிருந்தால்
ஒரு கதையோடு போயிருக்கும்
இப்பொழுது பார்வையிலேயே சொல்கிறாள்
ஓராயிரம் அமைதியிழக்கச் செய்யும் கதைகளை

1 comment: