வீதியில் நடந்து செல்கையில்
தற்செயலாகத்தான் பார்த்தேன் அப்பெண்ணை
தனக்கு வீடில்லை என
ஒரு தட்டியில் எழுதி தெரியப்படுத்துகிறாள்
சத்தியமாக இதற்குப் பின்னே ஒரு கதை இருக்கும்
அதைத் கேட்டுத்
தாங்கும் சக்தி தான் எனக்கில்லை
அவளைக் கடந்து செல்கையில்
குழப்பத்துடனே ஓரக் கண்ணில் பார்க்கிறேன்
கேட்டிருந்தால்
ஒரு கதையோடு போயிருக்கும்
இப்பொழுது பார்வையிலேயே சொல்கிறாள்
ஓராயிரம் அமைதியிழக்கச் செய்யும் கதைகளை

good poetic moment.. captured well..
ReplyDelete